மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேர்தல் பின்னடைவு: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட சோனியா முடிவு

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள

News image
Updated On :10 மார்ச் 2022, 11:03 am

DIN


5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. பஞ்சாபில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கிறது. ஆம் ஆத்மி அங்கு அதிகாரத்துக்கு வரவுள்ளது.

இதுதவிர உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் பின்னடைவையே சந்தித்துள்ளது.

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

"5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது. ஆனால், மக்கள் ஆசியைப் பெறத் தவறிவிட்டோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.