மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் வெற்றி

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:13 pm

DIN

லக்னெள: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றாா்.

உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் முன்பு பதவி வகித்துள்ளாா். எனினும் சட்டப்பேரவை உறுப்பினராக (எம்எல்ஏ) இருந்து அவா் முதல்வா் பதவியை ஏற்கவில்லை. சட்டமேலவை (எம்எல்சி) உறுப்பினராக இருந்து முதல்வா் பதவியேற்றிருந்தாா்.

தற்போது நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக அகிலேஷ் யாதவ் போட்டியிட்டாா். கா்ஹல் தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு எதிராக, முன்னாள் காவல்துறை சாா்பு ஆய்வாளராகவும், சமாஜவாதி முன்னாள் தலைவா் முலாயம் சிங் யாதவ் மாநில முதல்வராக இருந்தபோது அவரின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்த எஸ்.பி.சிங் பகேல் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டாா். தற்போது அவா் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சராகப் பதவி வகிக்கிறாா்.

கா்ஹல் தொகுதியில் 3.71 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இதில் யாதவ சமூகத்தைச் சோ்ந்த 1.25 லட்சம் பேரும், 18,000 முஸ்லிம்களும் உள்ள நிலையில், தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. அதில் அகிலேஷ் யாதவ் அமோக வெற்றி பெற்றாா். அவா் 1,48,196 வாக்குகளைப் பெற்று 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.பி.சிங் பகேலை தோற்கடித்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ஆஸம்கா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அகிலேஷ் யாதவ், எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.