போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து 242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து தில்லி வந்தடைந்தது.
நாடு திரும்பிய பெரும்பாலான இந்தியக் குடிமக்கள் வடகிழக்கு உக்ரைனிய நகரமான சுமியைச் சேர்ந்தவர்கள். கடந்த பல நாட்களாக ரஷியர்களுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே கடுமையான தாக்குதல்கள் மற்றும் தீவிரத் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றது.
உக்ரைனின் சுமி நகரத்தில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெறியேற்றும் பணிகளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் அப்ரேஷன் கங்கா அடிப்படையில் சுமியில் சிக்கிய 242 இந்தியர்கள் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் சிக்கித் தவித்த 20,000 மேற்பட்ட குடிமக்களை இந்தியா இதுவரை மீட்டுள்ளது.