உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
நடத்துமுடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து 255 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
முதல்வராக இருந்த யோகி ஆதித்யநாத் நேற்று தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஆனந்திபென் படேலிடம் அளித்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய அரசு அமையும் வரை யோகி ஆதித்யநாத்தை காபந்து முதல்வராக செயல்பட வேண்டுகோள் விடுத்தாா்.
அடுத்த முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாம் முறையாக பதவியேற்பார் என்று தெரிகிறது.
உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றியை அடுத்து, யோகி ஆதித்யநாத் நாளை தில்லி செல்ல உள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.
உ.பி.யில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவும் அமைச்சரவை குறித்து விவாதிக்கவும் செல்வதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திர தின விழா

ஆலங்குளம் பகுதியில்...

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் சுதந்திர தின விழா

ஜாா்க்கண்ட் தோ்வு முறைகேடு: தேசியக் கொடி ஏந்தி மாணவா்கள் போராட்டம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



