ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். 

News image
யோகி ஆதித்யநாத்
Updated On :12 மார்ச் 2022, 5:54 am

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். 

நடத்துமுடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து 255 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

முதல்வராக இருந்த யோகி ஆதித்யநாத் நேற்று தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஆனந்திபென் படேலிடம் அளித்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய அரசு அமையும் வரை யோகி ஆதித்யநாத்தை காபந்து முதல்வராக செயல்பட வேண்டுகோள் விடுத்தாா்.

அடுத்த முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாம் முறையாக பதவியேற்பார் என்று தெரிகிறது. 

உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றியை அடுத்து,  யோகி ஆதித்யநாத் நாளை தில்லி செல்ல உள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். 

உ.பி.யில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவும் அமைச்சரவை குறித்து விவாதிக்கவும் செல்வதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.