சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனா இழப்பீடு பெறுவதில் முறைகேடு: உச்சநீதிமன்றம் வருத்தம்

கரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ் வழங்குவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :14 மார்ச் 2022, 7:07 am

DIN

கரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ் வழங்குவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 50,000 தரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து இழப்பீடு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “கரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ் வழங்குவதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50,000 இழப்பீடு தர உத்தரவிட்டிருந்தோம். ஆனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீடு தர சொல்லவில்லை. இழப்பீடு பெற போலி ஆவணங்கள் சமர்பித்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுவது அவசியமாகிறது என்றனர்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.