விமானத்தில் கத்தி எடுத்துச் செல்ல சீக்கியர்களுக்கு அனுமதி

கிர்பான் எனப்படும் கத்தியை விமானங்களில் எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.
ஏர் இந்தியா விமானம்(கோப்புப்படம்)
ஏர் இந்தியா விமானம்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கிர்பான் எனப்படும் கத்தியை விமானங்களில் எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.

இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட செய்தியில்,

உள்நாட்டிற்குள் பயணிக்கும் இந்திய விமானங்களில் மட்டும் சீக்கிய பயணிகள் கர்பானை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. சீக்கியர்கள் எடுத்துச் செல்லும் கிர்பானின் அளவு 22.86 செ.மீ. மற்றும் அதன் கூர்மையான பிளேடின் அளவு 15.24 செ.மீ.க்கு அதிகமாக இருக்கக் கூடாது.

முன்னதாக, சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான கடத்தலை தடுக்க விமானங்களில் கத்தியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com