ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்படார். மேலும் அங்கிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.