மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தில்லியில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தேசிய தலைநகர் தில்லியில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :16 மார்ச் 2022, 6:42 am

தேசிய தலைநகர் தில்லியில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. 

12-14 வயது வரம்பில் சுமார் 6 முதல் 7 லட்சம் பேர் தடுப்பூசி போடத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் நாட்கள் செல்லச் செல்ல இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. 

தில்லியில் 11 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு 6,31,400 டோஸ் 
கோர்பிவேக்ஸ் தடுப்பூசி பெற்றுள்ளது. மேலும், துறை சார்ந்த ஊழியர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டை வைத்து தகுதியானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

மேலும் 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.