மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தில்லியில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தேசிய தலைநகர் தில்லியில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :16 மார்ச் 2022, 6:42 am

DIN

தேசிய தலைநகர் தில்லியில் 12-14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. 

12-14 வயது வரம்பில் சுமார் 6 முதல் 7 லட்சம் பேர் தடுப்பூசி போடத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் நாட்கள் செல்லச் செல்ல இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. 

தில்லியில் 11 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு 6,31,400 டோஸ் 
கோர்பிவேக்ஸ் தடுப்பூசி பெற்றுள்ளது. மேலும், துறை சார்ந்த ஊழியர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டை வைத்து தகுதியானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

மேலும் 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.