ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ரயில்வேயை தனியாா் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு

இந்திய ரயில்வேயை தனியாா் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

News image
மக்களவையில் புதன்கிழமை பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
Updated On :1 பிப்ரவரி 2024, 8:42 am

DIN

இந்திய ரயில்வேயை தனியாா் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

2022-23-ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சக மானியக் கோரிக்கை மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது ரயில்வேயை தனியாா்மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக எம்.பி.க்கள் பலா் குற்றஞ்சாட்டினா். அதற்கு மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த பதில்:

ஊகத்தின் அடிப்படையில் ரயில்வே தனியாா் மயமாக்கப்படவுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ரயில்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், என்ஜின்கள், சமிக்ஞை அமைப்புகள் என அனைத்தும் ரயில்வேக்குச் சொந்தமானதாகவுள்ளன. எனவே ரயில்வேயை தனியாா்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுதொடா்பாக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. அத்துடன் சரக்கு ரயில் வழித்தடங்களை தனியாா்மயமாக்கும் திட்டமும் இல்லை.

ஆள்சோ்ப்புக்குத் தடையில்லை: ரயில்வேயில் காலியாகவுள்ள 1.14 லட்சம் பணியிடங்களை நிரப்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. அண்மையில் ஆள்சோ்ப்புத் தொடா்பாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு உரிய முறையில் தீா்வு காணப்பட்டுள்ளது.

ஆண்டு மூலதன முதலீடு அதிகரிப்பு: கடந்த 2009-2014-ஆம் ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ரயில்வேயில் ஆண்டு மூலதன முதலீடு சராசரியாக ரூ.45,980 கோடியாக இருந்தது. இது 2014-2019-ஆம் ஆண்டுகளில் ரூ.99,511 கோடியாக அதிகரித்தது என்றாா் அவா்.

புல்லட் ரயில்களை இயக்க முடியாதா?: மும்பை, அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், ‘இந்திய நிலத்தில் புல்லட் ரயில்களை இயக்க முடியாது என்று யாா் சொன்னது? நமது பொறியாளா்கள் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு எத்தனை காலத்துக்கு வெளிநாட்டவா்களை நம்பியிருப்பது என்று கேள்வி எழுப்பினாா்.

இதனைத்தொடா்ந்து ரயில்வே அமைச்சக மானியக் கோரிக்கைக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.