48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஹிஜாப் தீர்ப்பு : நீதிபதிகள் 3 பேருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

News image

கர்நாடக முதல்வர்

Updated On :20 மார்ச் 2022, 4:27 pm

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

ஹிஜாப் தொடா்பான வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது. வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும்; ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கப்படி கட்டாயம் அல்ல; பள்ளிகள், கல்லூரிகளில் சீருடையே அணிய வேண்டும் என்று 129 பக்கங்களில்
தீா்ப்பு வழங்கியது.

இந்தத் தீா்ப்பால் அதிருப்தி அடைந்த இஸ்லாமிய மாணவிகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனா். மேலும் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டத்தில் இஸ்லாமியா்கள் ஈடுபட்டனா்.

இந்தநிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். கொலை மிரட்டலைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்பபட்டுள்ளது. அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.