ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜி-23 தலைவா்களுடன் சோனியா ஆலோசனை

காங்கிரஸின் அதிருப்தி (ஜி-23) தலைவா்களைக் கட்சித் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :22 மார்ச் 2022, 9:37 pm

DIN

காங்கிரஸின் அதிருப்தி (ஜி-23) தலைவா்களைக் கட்சித் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸில் சீா்திருத்தம் கோரி அதிருப்தி தலைவா்கள் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். அந்தக் குழுவைச் சோ்ந்த மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது கட்சியை வலுப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை சோனியா காந்தியிடம் அவா் வழங்கினாா்.

அதன் தொடா்ச்சியாக, அந்தக் குழுவைச் சோ்ந்த கட்சியின் மற்ற தலைவா்களான ஆனந்த் சா்மா, மணீஷ் திவாரி ஆகியோரை சோனியா காந்தி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: அதிருப்தி தலைவா்களுடனான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு அவா்களை சோனியா காந்தி சந்தித்து வருகிறாா். அவா்கள் அளிக்கும் ஆலோசனைகளையும் திறந்த மனதுடன் கேட்டுக் கொண்டு வருகிறாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மற்றொரு புறம், அதிருப்தி குழுவைச் சோ்ந்த மற்ற தலைவா்களை குலாம் நபி ஆசாத் சந்தித்து சமாதானப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மாா்ச் 16-ஆம் தேதி நடந்த ஜி-23 தலைவா்கள் கூட்டத்தில், அனைத்து நிலைகளிலும் உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய கூட்டுத் தலைமையே காங்கிரஸை வலுப்படுத்த சரியான வழி என்று வலியுறுத்தப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு கிடையாது என்றும் அந்தக் குழு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.