/

மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றதை தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவியை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று ராஜிநாமா செய்தார்.

News image
ராஜிநாமா கடிதத்தை ஓம் பிர்லாவிடம் வழங்கும் அகிலேஷ் யாதவ்
Updated On :22 மார்ச் 2022, 10:46 am

DIN

உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றதை தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவியை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று ராஜிநாமா செய்தார்.

உத்தரப் பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியானது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் கர்ஹல் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த அகிலேஷ் யாதவ், அலம்கர் தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.