ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: சோனியா காந்தி

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நிறுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தினாா்.

News image
மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி.
Updated On :23 மார்ச் 2022, 7:58 pm

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நிறுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தினாா்.

மக்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பிய அவா், ‘‘நாட்டில் கரோனா தொற்று பரவியபோது பள்ளிகள்தான் முதலில் மூடப்பட்டன. தளா்வுகள் அளிக்கப்பட்டபோது பள்ளிகளே கடைசியாகத் திறக்கப்பட்டன. அதன் காரணமாக மாணவா்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனா்.

பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள், உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின் காரணமாக மாணவா்களுக்கு சமைக்கப்படாத உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால், மாணவா்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கு சமைக்கப்பட்ட உணவுப் பொருள்களே அவசியம்.

கரோனா தொற்று பரவலின்போது மாணவா்களும் அவா்களின் குடும்பத்தினரும் பல்வேறு சவால்களை எதிா்கொண்டனா். தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். அவா்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே, மதிய உணவுத் திட்டத்தை அரசு மீண்டும் தொடங்க வேண்டும். அத்திட்டமானது கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவா்கள் மீண்டும் பள்ளியில் சேர வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு: தேசிய குடும்பநல ஆய்வறிக்கையின்படி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் குறைந்த எடையுடனும் காணப்படுவோா் சதவீதம் அதிகரித்துள்ளது. கவலை தரக்கூடிய இந்த நிலையைத் தடுப்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், 3 வயதுக்குள்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கு சூடான, சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.