'மறக்க முடியாத தருணம்': மாற்றுத்திறனாளி ஓவியருடன் மோடியின் சந்திப்பு அனுபவம்

ஓவியர் ஆயுஷ் குண்டலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். மாற்றுத்திறனாளியான ஓவியருடனான சந்திப்பு ‘மறக்க முடியாத தருணமாகும்’ என்று பிரதமர் மோடி சுட்டுரையில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
'மறக்க முடியாத தருணம்': மாற்றுத்திறனாளி ஓவியருடன் மோடியின் சந்திப்பு அனுபவம்
'மறக்க முடியாத தருணம்': மாற்றுத்திறனாளி ஓவியருடன் மோடியின் சந்திப்பு அனுபவம்

புது தில்லி: ஓவியர் ஆயுஷ் குண்டலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். மாற்றுத்திறனாளியான ஓவியருடனான சந்திப்பு ‘மறக்க முடியாத தருணமாகும்’ என்று பிரதமர் மோடி சுட்டுரையில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

மேலும், ஆயுஷ் குண்டலின் ஓவியங்களை காணுமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது; “ஆயுஷ் குண்டலை @aayush_kundal சந்தித்தது எனக்கு மறக்க முடியாத தருணமாக இருந்தது. ஆயுஷ் தமது உணர்வுகளை கால்விரல்களால் ஓவியமாக்கி வடிவமைப்பதில் அவரின் தேர்ச்சி அனைவரையும் ஈர்ப்பதாகும். நான் ஈர்க்கப்பட்டதால் அவரது சுட்டுரையை பின்தொடர்கிறேன்”

“ஆயுஷ் குண்டலின் @aayush_kundal ஓவியங்களைக் காணுமாறு உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். ஆயுஷ் உருவாக்கியுள்ள அவரது ஓவியத்திற்கான யுடியூப் பக்கத்தில், அவரது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை காட்டுவதாக உள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com