முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி. பொதுத்தேர்வு தொடக்கம்: முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா

உத்தரப் பிரதேசத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2022, 7:10 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

இதையடுத்து தேர்வு மையங்களில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேர்வு மையங்களைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மண்டலவாரியாக கண்காணிக்க மாஜிஸ்திரேட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'மொத்தம் 125 தேர்வு மையங்களில் சுமார் 4,830 கேமராக்கள் மற்றும் 272 டிவிஆர் பொருத்தப்பட்டுள்ளன. மென்பொருள் மூலம் அவையனைத்தையும் ஒன்றாக இணைத்துள்ளோம். அனைத்துப் பள்ளிகளிலும் தொடர் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் புகார்கள் குறித்து, கட்டுப்பாட்டு அறை எண், '9453991942'ல் தெரிவிக்கலாம்' என தலைமை கண்காணிப்பு அதிகாரி ரவீந்திர குமார் சௌகான் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.