பாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி அப்துல் வஹாப் லார்க் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த வஹாப், ஆப்கனில் செவ்வாயன்று காலை 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
வஹாப் லார்க், ஹக்கீம் அலி ஜான், ஹக்கீம் சலே, குஷி முஹம்மது, ஜிப்சி காந்தஹார் ஆகிய தீவிரவாதிகள் பலவித பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவார்.
உயிரிழந்த தீவிரவாதி தொடக்கத்தில் லஷ்கர்-இ-ஜாங்வி உஸ்மான் சைபுல்லா குர்த் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஆகஸ்ட் 2020இல் தனது மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து தெஹ்ரிக்-இ-தலிபான்-யில் சேர்ந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர், தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


