மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரதமரின் தினசரி வேலைகளில் ஒன்று எரிபொருள் விலையை உயர்த்துவது: ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தினசரி செய்ய வேண்டிய பட்டியலில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்துவது

News image

கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2022, 10:16 am

புது தில்லி: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பிரதமரின் தினசரி செய்ய வேண்டிய பட்டியலில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்துவது, விவசாயிகளை மிகவும் ஆதரவற்றவர்களாக மாற்றுவது என பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சுட்டுரையில் விமர்சித்துள்ளார்.

பிரதமரின் தினசரி செய்ய வேண்டிய பட்டியலில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை எவ்வளவு உயர்த்துவது, மக்களின் செலவுகள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய வெற்றுக் கனவுகளை எப்படிக் காட்டுவது, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்பது, விவசாயிகளை எப்படி உதவியற்றவராக உருவாக்குவது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தனது சுட்டுரையில் கூறியுள்ளார்.

கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29, டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.33 உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.