ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'வணக்கம் சொல்லவே வந்தேன், நாளை சந்திக்கிறேன்' பரபரப்பைக் கூட்டிய சோனியா

நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் திமுக அலுவலகத்துக்கு ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, அங்கு வந்து ஸ்டாலினை சந்தித்துவிட்டுச் சென்றார்.

News image
'வணக்கம் சொல்லவே வந்தேன், நாளை சந்திக்கிறேன்' பரபரப்பைக் கூட்டிய சோனியா
Updated On :31 மார்ச் 2022, 10:28 am

DIN

நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் திமுக அலுவலகத்துக்கு ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, அங்கு வந்து ஸ்டாலினை சந்தித்துவிட்டுச் சென்றார்.

இது அதிகாரப்பூர்வ சந்திப்பாக அமையவில்லை. திமுக அலுவலகத்துக்குள் வந்த சோனியா, ஸ்டாலினிடம், வணக்கம் சொல்லவே வந்தேன். நாளை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அவருக்கு பொன்னாடை அணிவித்து மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது.  இன்று பகல் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க. ஸ்டாலினின் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, நாடாளுமன்றம் வந்திருந்த ஸ்டாலின், திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார்.

இரு தலைவர்களும் அங்கு சந்தித்துப் பேசினர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. பிறகு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார்.

பிறகு பிரதமா் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.