மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சுய உதவிக்குழு பெண்களுடன் 'மோமோஸ்' சமைத்த முதல்வர் மம்தா

மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் பகுதியிலுள்ள சுய உதவிக் குழு பெண்களுடன் சேர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி 'மோமேஸ்' என்ற உணவு வகையை சமைத்தார். 

Published On :

மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் பகுதியிலுள்ள சுய உதவிக் குழு பெண்களுடன் சேர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி 'மோமேஸ்' என்ற உணவு வகையை சமைத்தார். 

மேற்கு வங்கத்திலுள்ள மலை மற்றும் சுற்றுலா தலமான டார்ஜிலிங் பகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார். பயணத்தின் கடைசி நாளான இன்று (மார்ச் 31) காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த மகளிர் நடத்தி வந்த மோமோஸ் (உணவு வகை) கடையைப் பார்வையிட்டார். அவர்களுடன் பேசிய மம்தா பானர்ஜி அவர்களுடன் சேர்ந்து மோமோஸ் சமைத்தார். 

பிசைந்து வைத்திருந்த மாவை எடுத்து உள்ளடக்கம் வைத்து மடித்து மோமோஸ் செய்தார். இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் பார்த்து புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துக்கொண்டனர். மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து அவர்களைப் போன்றே மோமோஸ் சமைத்த மம்தாவை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர். மேலும் மம்தாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.