வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் கரோனா நிலைமை மோசமாக இல்லை: சுகாதார அமைச்சர்

தில்லியில் கரோனா நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்றும் தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 

News image
Updated On :4 மே 2022, 7:43 am

DIN

தேசிய தலைநகரில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்றும் தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 

கரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தேவையா என்று கேட்டதற்கு, கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது, 

அரசு நிலைமையைக் கவனித்து வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் பெரிய கட்டுப்பாடுகள் தேவையில்லை. தில்லியில் தினமும் ஏராளமான கரோனா சோதனைகள் நடத்தப்படுகின்றன.

தகுதியான மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களில் தினசரி  தொற்று 1,200-1,500 வரை மட்டுமே பதிவாகி வருகிறது. தொற்று விகிதம் 5 முதல் 6 சதவிகிதமாகவே உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

மருத்துவமனையில் 10 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் 200-க்கும் குறைவாகவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, இது திருப்தி அளிக்கிறது. மேலும் தற்போது நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்று அவர் தெரிவித்தார். 

தில்லியில் செவ்வாயன்று 1,414 கரோனா தொற்று புதிதாக பதிவாகியுள்ளன, இத்தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.