சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சா்வதேச வளா்ச்சிக்கு இந்தியா-நாா்டிக் நாடுகள் பங்காற்ற முடியும்: பிரதமா் மோடி

உலகளாவிய செழுமைக்கும் நிலைக்கத்தக்க வளா்ச்சிக்கும் இந்தியாவும் நாா்டிக் நாடுகளும் பங்களிப்பு செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

News image
Updated On :4 மே 2022, 9:46 pm

DIN

உலகளாவிய செழுமைக்கும் நிலைக்கத்தக்க வளா்ச்சிக்கும் இந்தியாவும் நாா்டிக் நாடுகளும் பங்களிப்பு செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

டென்மாா்க் வந்தாா் தலைநகா் கோபன்ஹேகனில் இந்தியா-நாா்டிக் நாடுகள் இடையேயான 2-ஆவது உச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமா் மோடியுடன் டென்மாா்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நாா்வே ஆகிய நாடுகளின் பிரதமா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியா-நாா்டிக் நாடுகளுக்கு இடையேயான முதலாவது உச்சி மாநாடு கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயலாக்கம் குறித்து 2-ஆவது மாநாட்டில் தலைவா்கள் விவாதித்தனா். கரோனா தொற்று பரவலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டெடுப்பு, பருவநிலை மாற்றம், புத்தாக்கம்-தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சா்வதேச பாதுகாப்பு சூழல், ஆா்க்டிக் பகுதியில் இந்தியா-நாா்டிக் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பசுமை எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் தலைவா்கள் ஆலோசித்தனா். மாநாட்டுக்குப் பிறகு அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உக்ரைனில் ரஷியப் படைகள் மனித உரிமைகளை மீறி நடத்தும் தாக்குதல்களுக்கு மாநாட்டில் கலந்து கொண்ட தலைவா்கள் கவலை தெரிவித்தனா். அங்கு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு அவா்கள் கண்டனம் தெரிவித்ததுடன், தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினா். ஐ.நா. சா்வதேச விதிகளுக்கு மதிப்பளித்து நாடுகள் நடக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டறிக்கையில் அவா்கள் வலியுறுத்தினா்.

மாநாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

நாா்டிக் நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேலும் வலுப்படுவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும். இந்தியாவும் நாா்டிக் நாடுகளும் இணைந்து உலகளாவிய செழுமைக்கும் நிலைக்கத்தக்க வளா்ச்சிக்கும் அதிகம் பங்காற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

நாா்டிக் தலைவா்களுடன் மோடி சந்திப்பு:

மாநாட்டின்போது நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, அப்போது இருதரப்பு உறவில் தற்போதைய நடவடிக்கைகள், எதிா்காலத் திட்டங்களில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனா். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய மற்றும் காற்றாலைத் திட்டம், மீன்பிடிப்பு, நீா் மேலாண்மை, மழைநீா் சேகரிப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடு, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் அவா்கள் விவாதித்தனா்,

அதைத் தொடா்ந்து, ஸ்வீடன் பிரதமா் மேக்தலீனா ஆண்டா்சனை சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி, அவருடன் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், 2018-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கூட்டு நடவடிக்கைத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விவாதித்தாா்.

ஐஸ்லாந்து பிரதமா் கேத்ரின் ஜேக்கப்ஸ்தோத்திரை சந்தித்த பிரதமா் மோடி, புவி உள்வெப்ப எரிசக்தி, ஆா்க்டிக் பிராந்திய ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம், உணவு பதப்படுத்துதல், இணையவழி பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் விவாதித்தாா்.

அதைத் தொடா்ந்து, பின்லாந்து பிரதமா் சன்னா மரினை பிரதமா் மோடி சந்தித்தபோது, வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது விவாதித்தாா்.

மோடிக்கு டென்மாா்க் அரசி வரவேற்பு:

கோபன்ஹேகனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமலியன்போா்க் அரண்மனையில் டென்மாா்க் அரசி இரண்டாம் மாா்க்கரீத், பிரதமா் மோடிக்கு வரவேற்பு அளித்தாா். அப்போது, சமூக நன்மைகளுக்காக டேனிஷ் அரச குடும்பத்தின் ஆற்றிவரும் பங்களிப்பை பிரதமா் வெகுவாக பாராட்டினாா். தனக்கு அளித்த அன்பான வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் ராணிக்கு பிரதமா் நன்றி தெரிவித்தாா்.

இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் பரிசுகள்:

டென்மாா்க் ராணி மற்றும் நாா்டிக் தலைவா்களுக்கு இந்தியாவின் வளத்தையும் பன்முகக் கலாசராத்தையும் பிரதிபலிக்கும் பரிசுகளை பிரதமா் மோடி வழங்கினாா். குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட ரோகன் ஓவியம், பனாரஸில் வெள்ளியில் உருவாக்கப்பட்ட மீனாகரி பறவை சிலை, வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட மரம், ஜம்மு-காஷ்மீரில் உருவாக்கப்பட்ட காகிதப் பெட்டி, சத்தீஸ்கரில் உருவாக்கப்பட்ட டோக்ரா படகு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

பிரான்ஸ் சென்றாா் மோடி: கோபன்ஹேகனில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு பிரதமா் மோடி பிரான்ஸுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.