ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஹிமாசல் பேரவை வளாகத்தில் காலிஸ்தான் கொடி: ஒருவர் கைது

ஹிமாசல் மாநில சட்டப்பேரவை வளாக நுழைவுவாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 மே 2022, 7:18 am

DIN

ஹிமாசல் மாநில சட்டப்பேரவை வளாக நுழைவுவாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தகவல் தெரிவித்துள்ளார். 

ஹிமாசல பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டம் தா்மசாலாவில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாக நுழைவுவாயிலில் அதையொட்டிய சுற்றுச்சுவரிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அந்தக் கொடிகள் பின்னர் உடனடியாக அகற்றப்பட்டன. சுற்றுச்சுவரில் கொடிகளுக்குக் கீழே காலிஸ்தான் என எழுதப்பட்டிருந்த நிலையில், அவை அழிக்கப்பட்டு சுவற்றில் மீண்டும் வா்ணம் பூசப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குர் இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளதாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.