நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெளிநாடு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு...பூஸ்டர் டோஸ் விதிகளில் தளர்வு அறிவிப்பு

சேர வேண்டிய நாட்டின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள இந்திய குடிமக்களுக்கும் மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :12 மே 2022, 12:11 pm

DIN

வெளிநாட்டுக்கு பயணிக்கும் இந்தியர்கள், சேர வேண்டிய நாட்டின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது கூ பக்கத்தில், "எங்கு செல்ல வேண்டுமோ அந்த நாட்டின் விதிகளுக்கு ஏற்ப இந்திய குடிமக்களுக்கும் மாணவர்களும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம். இதற்கான வசதி கோவின் செயலியில் விரைவில் கொண்டு வரப்படும்" என பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு ஒன்பது மாத இடைவெளிக்கு முன்பாகவே வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள், சென்று சேர வேண்டிய நாட்டின் விதிகளுக்கு ஏற்ப பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள அனுமதி வழங்க நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்திருந்தது. 

ஆனால், மற்ற அனைவருக்கும் இடைவெளியை 9லிருந்து 6ஆக குறைக்க எந்த விதமான பரிந்துரையும் அளிக்கப்படவில்லை. இரண்டாம் டோஸ் செலுத்தி கொண்டு 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள 18 வயது நிரம்பியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.