அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உதய்பூருக்கு ரயிலில் பயணித்த ராகுல் காந்தி

​காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியிலிருந்து உதய்பூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

News image
Updated On :12 மே 2022, 5:09 pm

DIN


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியிலிருந்து உதய்பூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக உதய்பூர் செல்ல ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார் அவர். 

இதற்காக, ராகுல் காந்தி தில்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தை வியாழக்கிழமை மாலை வந்தடைந்தார்.

Story image

அவரை வழியனுப்பிவைக்க காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் நிலையத்தை சூழ்ந்தனர்.

அப்போது, ரயில் நிலையத்திலிருந்த தொழிலாளிகள் ராகுல் காந்தியுடன் உரையாடினர்.

Story image

உதய்பூர் கூட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு விரைகின்றனர். கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.