மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் தனியார் உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிவாண்டியில் உள்ள தனியார் உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்க்கை வழங்குவதற்காக பள்ளி தலைமையாசிரியர் உள்பட மூவரும் ரூ.3,500 கேட்டுள்ளனர். இதற்கான ரசீது 3 மாதங்கள் கழித்துக் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, சரியான ரசீது இல்லாததால் பெற்றோர்கள் அங்குள்ள காவல்நிலையில் புகார் செய்தனர். இதன் விளைவாக பள்ளியின் பள்ளியின் தொடக்கக்கல்வி தலைமை ஆசிரியர் தீபக் லெலே (55), பள்ளியின் இடைநிலைக் கல்விப் பிரிவின் தலைமை ஆசிரியர் ஆத்மாராம் வாக் (57) மற்றும் ஆசிரியர் சுரேஷ் குல்கர்னி (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளூர் காவல் நிலையத்தில் மூவர் மீதும் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


