மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படும் காண்டாமிருகத்தின் கொம்புகள்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கொம்புகள் வேட்டைக் காரர்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

News image

rhino

Updated On :13 மே 2022, 9:05 pm IST

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கொம்புகள் வேட்டைக் காரர்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

அஸ்ஸாமின் ஒராங் தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் கொம்பு வேட்டைக்கார்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 9 ஆம் தேதி ஒராங் தேசிய பூங்காவில் முவமாரி பகுதியில் காண்டாமிருகம் ஒன்று கொம்பு இல்லாமல் இருந்ததை பூங்காவில் உள்ள அதிகாரிகள் கவனித்துள்ளனர். இதனையடுத்து, வனத்துறை மருத்துவர்கள் பூங்காவிற்கு வந்து காண்டாமிருகத்தினை பரிசோதித்தனர். காண்டாமிருகத்தினை பரிசோதித்த வனத்துறை மருத்துவர் மற்றும் அந்த பூங்காவின் தலைமைக் காவலர் இருவரும் வேட்டைக் காரர்கள் துப்பாக்கியின் மூலம் மயக்க மருந்து செலுத்தி கொம்பினை வெட்டி எடுத்திருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால், குண்டு பாய்ந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் அந்த காண்டாமிருகத்தின் மீது தென்படவில்லை. முதலில் இதனை வனவிலங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டையினால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்த வனத்துறை மருத்துவர் பின்னர் கொம்பு வெட்டி அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.

வனத்துறை மருத்துவரின் சிகிச்சைக்கு பின்னர் காண்டாமிருகத்தின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால், இது போன்ற சம்பவங்கள் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதே போல இந்த வேட்டையில் கால்நடை மருத்துவம் படித்தவர்கள் சம்பந்தபட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மயக்க மருந்து சதாரண நபர்களுக்கு கிடைப்பது கடினம். அப்படி கிடைத்தாலும் அதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து சாதாரண மனிதர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.