
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிகாருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.
உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களை மீட்க ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.