மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாமில் வெள்ளத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க புதிய திட்டம்

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார். 

News image
Updated On :18 மே 2022, 11:52 am

DIN

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

மாநிலத்தின் காசிரங்கா மற்றும் பிற தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் காசிரங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 

இந்நிலையில், காசிரங்காவில் மீட்பு நடவடிக்கைகளுக்காக பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கான உணவு  சேவைகளை வழங்க அரசு தயாராக உள்ளது. 

வனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர்களை மீட்க 25க்கும் மேற்பட்ட படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

வெள்ள நெருக்கடியை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதேசமயம் விலங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, 

கச்சார் மாவட்டத்தில் 96,697 பேரும், ஹோஜாயில் 88,420 பேரும், நாகோனில் 58,975 பேரும், தர்ரங்கில் 56,960 பேரும், பிஸ்வநாத்தில் 39,874 பேரும், உடல்குரி மாவட்டத்தில் 22,526 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். .

67 வருவாய் வட்டங்களுக்குட்பட்ட 1,089 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 32944.52 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இதுதவிர, மாவட்ட நிர்வாகம் 89 நிவாரண முகாம்களையும், 89 விநியோக மையங்களையும் அமைத்து அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 39,558 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.