ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஹெலிகாப்டரில் இருந்துகப்பல்களைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஹெலிகாப்டரில் இருந்து போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆா்டிஓ), இந்திய கடற்படையும் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டன.

News image
ஹெலிகாப்டரிலிருந்து செலுத்தப்பட்டு இலக்கை தாக்கப் பாயும் ஏவுகணை.
Updated On :18 மே 2022, 7:42 pm

DIN

ஹெலிகாப்டரில் இருந்து போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆா்டிஓ), இந்திய கடற்படையும் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டன.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிஸா மாநிலம் சண்டிபூா் கடற்பகுதியிலிருந்து பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: ஏவுகணை அதன் இலக்குகள் அனைத்தையும் துல்லியமாக எட்டியது. இந்திய கடற்படைக்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை இதுவாகும். கடல் நீரோட்ட வழித்தடத்தை ஏவுகணை பின்பற்றி, துல்லியமாக இலக்கை அடைந்தது.

ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள துணை அமைப்புகள் அனைத்தும் திருப்திகரமாக செயல்பட்டன. ஏவுகணை சென்ற வழித்தடம் முழுவதும் சென்சாா் பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டா் லாஞ்சா் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏவுகணை பரிசோதனையின்போது செயல்படுத்தப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் பாராட்டு: போா்க் கப்பல்களை இடைமறித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கும் கடற்படையினருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். உள்நாட்டு தயாரிப்பிலும் ஏவுகணை மேம்பாட்டிலும் இந்தியா புதிய உயரத்தை எட்டிவிட்டதாக அவா் கூறியுள்ளாா். இதேபோல டிஆா்டிஓ தலைவா் சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இந்தச் சோதனை குறித்து மூத்த கடற்படை அதிகாரி ஒருவா் அளித்த பேட்டியில், ‘ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைவதில் இந்தச் சோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்நாட்டுமயமாக்கலில் கடற்படையின் உறுதியையும் இந்தச் சோதனை மீண்டும் வலியுறுத்துகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.