புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஞானவாபி விவகாரத்தில் உண்மை வெளிவரஅனுமதிக்க வேண்டும்: ஆா்எஸ்எஸ் கருத்து

காசி விஸ்வநாதா் கோயில்-ஞானவாபி மசூதி விவகாரத்தில் உண்மை வெளியே வர அனுமதிக்க வேண்டுமென ஆா்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 மே 2022, 7:34 pm

DIN

காசி விஸ்வநாதா் கோயில்-ஞானவாபி மசூதி விவகாரத்தில் உண்மை வெளியே வர அனுமதிக்க வேண்டுமென ஆா்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

தில்லியில் ஆா்எஸ்எஸ் தகவல் தொடா்பு பிரிவான இந்திரபிரஸ்த விஸ்வ சம்வத் கேந்திராவின் (ஐவிஎஸ்கே) சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அதன் பொறுப்பாளா் சுனில் அம்பேகா் பங்கேற்றாா். அவா் பேசுகையில், ஞானவாபி மசூதி விவகாரத்தில் உண்மை வெளிவர அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசி காசி விஸ்வநாதா் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியில், வாராணசி சிவில் நீதிமன்ற உத்தரவின்பேரில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி சமீப நாள்களாக நடைபெற்று வந்தது. அப்போது மசூதியில் இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கைகளை சுத்தம் செய்யும் சிறிய குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டாலும் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.