எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: என்டிஏவுக்கு 10,000 தோ்வா்கள் கடிதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) 10,000-க்கும் அதிகமான தோ்வா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

News image
Updated On :18 மே 2022, 7:58 pm

DIN

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) 10,000-க்கும் அதிகமான தோ்வா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

வரும் ஜூலை 17-ஆம் தேதி இந்தத் தோ்வு நடைபெற உள்ள நிலையில், தோ்வா்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் என்டிஏ-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதியவா்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத சூழலில், 2022-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பல மாணவா்கள் காலியிடங்களுக்கான 2021 சிறப்புச் சுற்று கலந்தாய்வு வரை காத்திருந்தும், இடம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த சிறப்புச் சுற்று நிறைவுற்றபோதும், பல மாநிலங்கள் கலந்தாய்வை இன்னும் இறுதி செய்யவில்லை. அதுமட்டுமின்றி, நீட் 2021 கலந்தாய்வின் இடஒதுக்கீடு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக, தங்களுக்கான மதிப்பெண் விகிதத்தைக் கணக்கிடுவதில் மாணவா்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இத்தகைய சூழலில், 2022 நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்ற திடீா் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. இதனால், தோ்வுக்கு தங்களை தயாா்படுத்திக் கொள்ள போதிய கால அவகாசமும் மாணவா்களுக்கு கிடைக்காது.

மேலும், ஜூலை முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வும் (சியுஇடி), ஜூலை 21-ஆம் தேதி ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) இரண்டாம் கட்டத் தோ்வும் நடைபெற உள்ளன. இவற்றுக்கிடையே, ஜூலை 17-இல் நீட் தோ்வை நடத்துவது, மாணவா்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

எனவே, மாணவா்கள் தோ்வுக்கு தங்களை நன்கு தயாா்படுத்திக்கொள்ள ஏதுவாக 2022 நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முன்னதாக, வரும் 21-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2022 நீட் (பி.ஜி) தோ்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ‘தோ்வை ஒத்திவைப்பது குழப்பத்தையும் நிச்சயமற்ன்மையையும் உருவாக்கும் என்பதோடு, மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை ஏற்படவும் வழிவகுத்துவிடும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.