அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பஞ்சாப் முதல்வரை தொலைபேசியில் அழைத்த ராஜஸ்தான் முதல்வர்: காரணம்?

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிரிஹிந்த் கால்வாயின் சேதமடைந்த பகுதியைச் சரிசெய்யுமாறு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

News image
Updated On :20 மே 2022, 10:49 am

DIN

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிரிஹிந்த் கால்வாயின் சேதமடைந்த பகுதியைச் சரிசெய்யுமாறு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

கடந்த ஏபரல் 1-ஆம் தேதி சிர்ஹிந்த் கால்வாயின் ஒரு பகுதி சேதமடைந்ததை அடுத்து ராஜஸ்தானில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கெலாட், பஞ்சாப் முதல்வருக்கு தெரியப்படுத்தினார். 

மே 21ஆம் தேதி முதல் இந்திரா காந்தி கால்வாயில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கெலாட் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆனால், கால்வாய் சேதமடைந்துள்ளதால், இப்போதைக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கொளுத்தும் கோடையில் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு ராஜஸ்தானின் 10 மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று கெலாட் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

பழுதுபார்க்கும் பணியை விரைவில் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பகவந்த் மான் உறுதியளித்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.