ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறு தீ விபத்து

புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகலில் சிறிய தீவிபத்து ஏற்பட்டு அது உடனடியாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :21 மே 2022, 6:30 pm

 நமது நிருபர்

புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகலில் சிறிய தீவிபத்து ஏற்பட்டு அது உடனடியாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு புதிதாக நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வரப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிகளுக்கிடையே சனிக்கிழமை பிற்பகல் 12.35 மணியளவில் கட்டடத்தின் பாதுகாப்புக்கான வலைப்பகுதியிலே தீப்பிடித்ததாக தீ அணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், நாடாளுமன்ற வளாகத்திலேயே தயாராக இருக்கும் தீயணைப்பு ஊழியா்கள் விரைவாக செயல்பட்டு இந்த தீயை அணைத்ததாக இந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் கடுமையான வெப்ப நிலை நிலவி வரும் நிலையில் கடந்த மே 16 ஆம் தேதியன்று நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகிலுள்ள சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களுக்கான மூன்று தற்காலிக தங்குமிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்டது.

கடந்த 2021 டிசம்பா் 1 ஆம் தேதி பழைய நாடாளுமன்றக் கட்டத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீவிபத்தால் கணினி உள்ளிட்ட தளவாட சாமான்கள் சேதமடைந்தன. பழைய நாடாளுமன்ற கட்டடம் இட நெருக்கடியில் மட்டுமின்றி, தீ விபத்து போன்றவற்றிலும் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவே கருதப்பட்டு புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.