நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பஞ்சாபில் 100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன்

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

News image

கோப்புப் படம்.

Updated On :22 மே 2022, 12:09 pm

DIN

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பஞ்சாப் மாநிலம், ஷோஷியார்பூர் அருகே கியாலா கிராமத்தில் உள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை சில தெருநாய்கள் இன்று துரத்தியுள்ளன. உடனே அந்த சிறுவன் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளான். அப்போது சிறுவன் எதிர்பாராத விதமாக சணல் பையால் மூடப்பட்டிருந்த 100 அடி ஆழ்துறை கிணற்றில் விழுந்துள்ளான். 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவசர சேவைக்காக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. இதனிடையே சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினரும் விரைந்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், குழந்தையை மீட்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். இவ்வறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.