பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

விலை குறைக்காமல் காரணம் கூறும் திமுக அரசு: அண்ணாமலை

திமுக அரசு அரசியல் லாபத்திற்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது காரணம் கூறி வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

News image

கே. அண்ணாமலை

Updated On :22 மே 2022, 10:28 am


திமுக அரசு அரசியல் லாபத்திற்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது காரணம் கூறி வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: 

"எந்தவொரு பட்ஜெட்டிலும் பெட்ரோல், டீசல் குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்காமலே நாங்கள் விலையைக் குறைத்து வருகிறோம். ஆனால், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 5 குறைக்கப்படும் என்றும், ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்படும் என்றும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தார்கள். இதை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

இதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைக்கவில்லை என்று நிதியமைச்சரிடம் (தமிழ்நாடு நிதியமைச்சர்) கேட்டபோது, பெட்ரோலுக்கு மட்டும் 5 ரூபாய் சொன்னோம் 3 ரூபாய் குறைக்கிறோம் என விலை குறைத்தார். அவர்கள் வாக்குறுதியளித்த 5 ரூபாய் குறையாது. 

டீசல் விலை குறைக்கவில்லையே ஏன் எனக் கேட்டதற்கு, டீசல் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பயனாளிகள் குறித்து கணக்கெடுத்துக் கொண்டிருப்பதால், அது குறைக்கப்படவில்லை என்றார். இதைக் கூறி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபிறகும், நிதியமைச்சர் புதிய காரணத்தினைக் கூறுகிறார்.

2014-க்குப் பிறகு மாநில அரசு மதிப்புக் கூட்டு வரி மூலம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7 அதிகப்படுத்தியிருக்கிறது. 2014-இல் பெட்ரோலியம் மூலமாக ரூ. 12 ஆயிரம் கோடி மாநிலத்திற்கு வருவாய் இருந்தது. தற்போது ரூ. 19 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. 2017-இல் புதிய விதிமுறை மாற்றப்பட்டு அதன்மூலம் நிறைய சம்பாதிக்கின்றனர். அதுகுறித்து நிதியமைச்சர் பேசவில்லை.

தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது, பாஜகவிடம் கருத்து கேட்டபிறகா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்? அரசியல் லாபத்திற்காக விலை குறைப்பதாகக் கூறிவிட்டு, காரணம் கூறி வருகின்றனர்" என்றார் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.