கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விலை குறைக்காமல் காரணம் கூறும் திமுக அரசு: அண்ணாமலை

திமுக அரசு அரசியல் லாபத்திற்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது காரணம் கூறி வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

News image

கே. அண்ணாமலை

Updated On :22 மே 2022, 10:28 am

DIN


திமுக அரசு அரசியல் லாபத்திற்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது காரணம் கூறி வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: 

"எந்தவொரு பட்ஜெட்டிலும் பெட்ரோல், டீசல் குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்காமலே நாங்கள் விலையைக் குறைத்து வருகிறோம். ஆனால், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 5 குறைக்கப்படும் என்றும், ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்படும் என்றும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தார்கள். இதை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

இதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைக்கவில்லை என்று நிதியமைச்சரிடம் (தமிழ்நாடு நிதியமைச்சர்) கேட்டபோது, பெட்ரோலுக்கு மட்டும் 5 ரூபாய் சொன்னோம் 3 ரூபாய் குறைக்கிறோம் என விலை குறைத்தார். அவர்கள் வாக்குறுதியளித்த 5 ரூபாய் குறையாது. 

டீசல் விலை குறைக்கவில்லையே ஏன் எனக் கேட்டதற்கு, டீசல் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பயனாளிகள் குறித்து கணக்கெடுத்துக் கொண்டிருப்பதால், அது குறைக்கப்படவில்லை என்றார். இதைக் கூறி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபிறகும், நிதியமைச்சர் புதிய காரணத்தினைக் கூறுகிறார்.

2014-க்குப் பிறகு மாநில அரசு மதிப்புக் கூட்டு வரி மூலம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7 அதிகப்படுத்தியிருக்கிறது. 2014-இல் பெட்ரோலியம் மூலமாக ரூ. 12 ஆயிரம் கோடி மாநிலத்திற்கு வருவாய் இருந்தது. தற்போது ரூ. 19 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. 2017-இல் புதிய விதிமுறை மாற்றப்பட்டு அதன்மூலம் நிறைய சம்பாதிக்கின்றனர். அதுகுறித்து நிதியமைச்சர் பேசவில்லை.

தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது, பாஜகவிடம் கருத்து கேட்டபிறகா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்? அரசியல் லாபத்திற்காக விலை குறைப்பதாகக் கூறிவிட்டு, காரணம் கூறி வருகின்றனர்" என்றார் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.