ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குரங்கு அம்மைக்காக தனி சிகிச்சை பிரிவை உருவாக்கும் மும்பை

உலகின் சில நாடுகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதால் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் 28 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 மே 2022, 10:36 am

DIN

உலகின் சில நாடுகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதால் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் 28 படுக்கை வசதி கொண்ட தனி மருத்துவப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை மும்பை நகரில் ஒருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனை மும்பை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த குரங்கு அம்மை தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் கூறியிருப்பதாவது, ” இந்த நோயானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவக்கூடியது. இந்த குரங்கு அம்மை பரவும் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த நோய் குறித்து அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கஸ்தூர்பா மருத்துவமனையில் 28 படுக்கை வசதிகள் கொண்ட தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை அறிகுறிகளாக காய்ச்சல்,சிகப்பு புள்ளிகள் மற்றும் வீக்கம் போன்றன உடலில் ஏற்படும் மாற்றங்கள். இந்த அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பின் இறப்பு நேரிடவும் வாய்ப்புள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தும், நோய் பாதிப்பு ஏற்பட்ட நபரிடமிருந்து மற்ற நபர்களுக்கும் பரவுகிறது. உடலில் ஏற்படும் காயங்கள், வாய், மூக்கு ஆகியவை வழியாக எளிதில் உடலினுள் சென்று விடுகின்றன. அதேபோல மனிதனின் உடல் திரவங்களிலிருந்தும் இந்த குரங்கு அம்மை நோய் பரவுதாக கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.