சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளின் வாழ்க்கையை நவீனமயமாக்குகிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ ஐ தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

News image
Updated On :27 மே 2022, 11:02 am

DIN

புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ ஐ தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அவர் வேளாண் ட்ரோன் விமானிகளுடன் உரையாடினார். திறந்தவெளி  ட்ரோன் செயல் விளக்கங்களை கண்டார் மற்றும் ட்ரோன் கண்காட்சி மையத்தில் உள்ள தொழில்முனைவோர்களுடன் உரையாடினார்.

ட்ரோன் துறையில் தனக்கு உள்ள ஈர்ப்பு மற்றும் ஆர்வம் குறித்து பேசிய பிரதமர், ட்ரோன் கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர்களின் உற்சாகம் மற்றும் இத்துறையில் உள்ள கண்டுபிடிப்புகளால் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். 

மீன்பிடி தொழில் போன்ற துறைகளில் ட்ரோன்கள் சிறப்பான பலனை தரும். வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகளை ட்ரோன்கள் மிகவும் எளிமையாக செய்கின்றன என்று குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், சுற்றுலா, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.

டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளை மேம்படுத்துவதிலும் அவர்களின் வாழ்க்கையை நவீனமயமாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.