லடாக்கில் பேருந்து விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “லடாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன.
இதையும் படிக்க- லடாக்: வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.