லடாக்கில் ஏற்பட்ட வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலியாகினர்.
லடாக்கில் உள்ள துர்துக் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பலியாகினர். சில ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சையளிக்க இந்திய விமானப்படையிடம் ராணுவம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.