ஆந்திரத்தில் நின்றுகொண்டிருந்த மினிவேன் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி
ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் ரென்ட சிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீசைலத்தில் இருந்து 39 பயணிகளுடன் வந்தது கொண்டிருந்த மினிவேன் பல்நாடு மாவட்டம், ரென்ட சிந்தலா கிராமத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
"இந்நிலையில், அந்த வழியே வந்த லாரி ஒன்று, நின்று கொண்டிருந்த மினிவேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மினிவேன் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்கள் அனைவரும் குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | அரக்கோணம் யாா்டில் பொறியியல் பணி: ரயில் சேவையில் மாற்றம்