மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத் பால விபத்து: உச்சநீதிமன்றம் நவ. 14-இல் விசாரணை

குஜராத் பால விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தை அமைக்கக் கோரி

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:20 pm

DIN

குஜராத் பால விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை வரும் நவம்பா் 14-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

வழக்குரைஞா் விஷால் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இந்த மனுவில், ‘இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி பேலா எம் திரிவேதி அடங்கிய அமா்வு, இம்மனு வரும் நவம்பா் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.