பள்ளியை கேளிக்கை விடுதியாக மாற்றிய ஆசிரியர்: விடியோவால் சிக்கினார்

மது விருந்து அளித்து கேளிக்கை விடுதியாக மாற்றிவைத்திருந்த ஆசிரியர் குறித்த தகவல் விடியோ மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பள்ளியை கேளிக்கை விடுதியாக மாற்றிய ஆசிரியர்: விடியோவால் சிக்கினார்
பள்ளியை கேளிக்கை விடுதியாக மாற்றிய ஆசிரியர்: விடியோவால் சிக்கினார்
Updated on
1 min read

ஷிவ்புரி: மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அவ்வப்போது மது விருந்து அளித்து கேளிக்கை விடுதியாக மாற்றிவைத்திருந்த ஆசிரியர் குறித்த தகவல் விடியோ மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளியில் மது மற்றும் அசைவ உணவுகளை வழங்கி மிகப்பெரிய அளவில் விருந்து கொடுத்த சம்பவம், கிராம மக்கள் எடுத்த விடியோ மூலம் அதிகாரிகளுக்குத் தெரிய வந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போடா கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிக் கட்டடத்தில் விருந்து கொடுத்த விடியோ கடந்த திங்கள்கிழமை சமூக வலைத்தளத்தில் பரவியது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இந்த விருந்து எப்போது அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

இந்த ஆசிரியர், பள்ளியில் அவ்வப்போது மதுவிருந்து கொடுப்பது வழக்கம் என்றும் தட்டிக்கேட்கும் பொதுமக்களை அவர் மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.

இந்த விடியோவை எடுக்கும் கிராம மக்களையும் அந்த ஆசிரியர் மிரட்டி விரட்டி விடுவதும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com