தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுற்றுலா மேம்பாட்டிற்காக, எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுங்கள்: மக்களுக்கு மோடி கோரிக்கை

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக சீமா தரிசனத்தின் ஒரு பகுதியாக நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று

News image
Updated On :8 நவம்பர் 2022, 6:56 am

DIN

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக சீமா தரிசனத்தின் ஒரு பகுதியாக நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடமையில் இருக்கும் நமது தேசத்தின் துணிச்சலான வீரர்களைக் காணும் தனித்துவமான அனுபவத்தை இந்தியாவின் எல்லைகள் வழங்குகின்றன என்று மத்திய சுற்றுலா, கலாசாரம் மற்றும் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கான அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் நரேந்தி மோடி பதிலளித்துள்ளார். 

அதில், “சீமா தரிசனம், சுற்றுலாத் துறைக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. எல்லைகளில் வசிப்போரின் நெகிழ்தன்மையைப் போற்றும் வாய்ப்பை அது வழங்குகிறது.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக, நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளுக்கு நேரில் சென்று காணுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.