ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் வரவேற்பு

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :7 நவம்பர் 2022, 9:48 pm

DIN

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

பாஜக அமைப்புச் செயலா் பி.எல்.சந்தோஷ் கூறுகையில், ‘ஏழைகளுக்கான பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்குக் கிடைத்த வெற்றியாக இந்தத் தீா்ப்பு உள்ளது. சமூக நீதியை அடைவதற்கான பாதையில் இந்தத் தீா்ப்பு பெரும் ஊக்கமாக அமையும்’ என்றாா்.

காங்கிரஸ் நடவடிக்கைகளே காரணம்: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது சின்ஹோ குழு (2005-06) அமைக்கப்பட்டது. அக்குழு 2010-ஆம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மீது விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு 2014-ஆம் ஆண்டு மசோதாவாக இயற்றப்பட்டது. அதை சட்டமாக்க பாஜகவுக்கு 5 ஆண்டுகள் ஆகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யும்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் கூறுகையில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீா்ப்பு, நாட்டில் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமையும்’ என்றாா்.

எனினும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் சுகேந்து சேகா், தீா்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.