திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிகார் முதல்வர்

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் கோருகிறோம் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :8 நவம்பர் 2022, 2:47 pm

DIN

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் கோருகிறோம் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது. அமா்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளில் 3 போ் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும், மற்ற இருவா் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீா்ப்பளித்தனா்.

“உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது முற்றிலும் சரி. ஆனால் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் கோருகிறோம். சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நாங்கள் தொடங்கினோம். இது மக்களின் பொருளாதார நிலையையும் தெளிவுபடுத்தும் மற்றும் அவர்களுக்கான சிறந்த திட்டங்களை வழங்க முடியும். 

சாதி வாரி கணக்கெடுப்பு நடந்துவிட்டால் 50 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் அதிகமாகலாம். இதற்கு மக்கள் தொகையின் அடிப்படையிலே தரப்பட வேண்டும். இதை பிகாரில் செய்து வருகிறோம், இது நாடு முழுவதும் செய்யப்பட வேண்டும். அதனால் 50 சதவிகித இட ஒதுக்கீடு அதிகரிக்கும்” என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.