தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

சென்னையிலிருந்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது: 9 ரயில்கள் ரத்து!

சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

News image
Updated On :9 நவம்பர் 2022, 10:59 am IST

சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், 9 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Story image

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் தடம் புரண்டதால், இந்த வழிதடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.