மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஏர்வாடா மத்தியச் சிறையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சிறை ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.
இச்சம்பம் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. சிறைக்குள் இருந்த மற்றொரு குழு மீது கைதிகளின் குழு கற்கள் மற்றும் ஓடுகள் வீசியதாக ஏர்வாடா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறை ஊழியர்கள் தலையிட முயன்றபோது, சிறை கைதிகளில் சிலர் கற்களை வீசி 2 சிறை ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கினர்.
காயமடைந்த சிறை ஊழியர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில், ஐந்து கைதிகள் பின்னர் கைது செய்யப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டனர்.