டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நவ.15-ல் ம.பி.க்கு செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு!

மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :14 நவம்பர் 2022, 7:20 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். 

மேலும், திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு பஞ்சாயத்துகள் நீட்டிப்பு சட்டமும் நாளை மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும் என்று சௌகான் தெரிவித்தார். 

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையிலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும் நவம்பர் 15-ம் தேதி ஜன்ஜாதிய கொளரவ் திவாஸ் கொண்டாடப்படும் என அந்நாட்டு அரசு கடந்தாண்டு அறிவித்தது. 

மாநில அளவிலான ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நிகழ்ச்சி, ஷாஹ்தோல் மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெறும் என்று சௌகான் கூறினார்.

முர்முவின் வருகைக்கான ஏற்பாடுகளை லால்பூர் கிராமத்தில் முதல்வர் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.