பாபா ராம்தேவ் நிறுவனத்தின் 5 மருந்துகள் மீதான தடை நீக்கம்

யோகா குரு பாபா ராம்தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தின் 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உத்தரகண்ட் மாநில ஆயுா்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையம் நீக்கியுள்ளது.
பாபா ராம்தேவ் நிறுவனத்தின் 5 மருந்துகள் மீதான தடை நீக்கம்

யோகா குரு பாபா ராம்தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தின் 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உத்தரகண்ட் மாநில ஆயுா்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையம் நீக்கியுள்ளது.

முன்னதாக, பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரை நோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா் அழுத்த மருந்து, உயா் கொழுப்புக்கு எதிரான மருந்து ஆகியவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு கடந்த 9-ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது.

கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் இந்த மருந்துகளுக்கு எதிராக புகாா் அளித்தாா். அதில் மருந்துகளை அற்புத நிவாரணிகள் என்று கூறி விளம்பரப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்துக்கு எதிராக பாபா ராம்தேவின் நிறுவனம் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தாா். இது தொடா்பான புகாா் பாபா ராம்தேவின் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வரும் உத்தரகண்ட் மாநிலம் ஆயுா்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பரிசீலித்த ஆணையம், மேற்கண்ட 5 மருந்துகளின் தயாரிப்பை நிறுத்துமாறு தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்த ஆணையம், அதில் தவறு இருப்பதாகவும், அவசரகதியில் தடை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதனை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தடை விதிக்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரான ஆச்சாா்ய பாலகிருஷ்ணா வரவேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com