தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேர் கைது!

மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேரை  போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :15 நவம்பர் 2022, 9:16 am

DIN

மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேரை  போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

சந்தேக நபர்கள் இஸ்லாமிய அரசு குழுவுடன் இணைந்து பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவர் உஸ்வத் அகமது திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மூன்று இடங்களில் சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டதாகவும், 13 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

மாலத்தீவு அழகிய கடற்கரைகள் மற்றும் விடுதிகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் மத தீவிரவாதம் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.